search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் உண்டியல் பணம் கொள்ளை"

    காரிமங்கலம் அருகே நேற்று இரவு கோவில் உண்டியலை உடைத்து 3 பவுன் நகை மற்றும் ரூ.6 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே அடிலம் ஊராட்சி உட்பட்ட ஏ. சப்பாணிப்பட்டி கிராமத்தில் மஹா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவிலை நேற்று இரவு பூசாரி வழக்கம்போல் பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை பூசாரி மீண்டும் கோவிலை திறக்க வந்தார்.

    அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து ரூ.6 லட்சம் பணத்தையும், 3 பவுன் தங்க நகை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது சென்றது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு காரிமங்கலத்தை அடுத்த அனுமந்தபுரத்தில் உள்ள முருகன் மற்றும் மாரியம்மன் கோவில்களில் பணம், நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுபோன்று அள்ளிகுட்டை பகுதியில் உள்ள மாரியம்மன்கோவிலிலும் நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

    காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மர்ம நபர்கள் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து சம்பந்தபட்ட போலீசார் அந்தந்த பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு மர்ம நபர்களை கண்காணித்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அரியாங்குப்பத்தில் கோவில் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றம் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாகூர்:

    அரியாங்குப்பம் காளான்தோட்டம் பகுதியில் குடியிருப்புகள் மத்தியில் பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சமீபத்தில் சூர‌ஷம்சாரவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை பணத்தை செலுத்தினர்.

    இந்த நிலையில் நேற்று மாலை பூஜை முடிந்ததும் அர்ச்சகர் கோவிலை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை வழக்கம்போல் அர்ச்சகர் கோவிலுக்கு பூஜை செய்ய வந்தார். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவில் உண்டியலில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×